அத்தியாயம் 28
“எனக்கும் அது தெரியவில்லை தேவ், போட்டு வாங்குறேன்” என்றவன், கிஷோர் இன்னும் வரவில்லை என்றவுடன், “கிஷோர்…” என்று கத்தினான். “சாரி சாரி போலாம், என் காரில் போலாம். உங்களுடைய கார் இங்கேயே இருக்கட்டும்” என்றான். “இல்லை கிஷோர், விக்ரம் உன்னோடு வருவான். நான் என்னுடைய காரில் வருகிறேன்” என்று இடத்தை விட்டு எழுந்தான் தேவ். பின் மூவரும் கிளம்பினர். கிஷோருடன் காரில் வந்து கொண்டிருந்த விக்ரம், “நீ காதலிக்கும் பெண்ணுடைய குடும்பம் பற்றித் தெரியுமா?” என்று கேட்டுப் […]
