January 2026

அத்தியாயம் 45

யமுனாவும் ஒரு மனுஷி தான், அவள் புரோகிராமிங் செய்த மிஷின் இல்லை என்பதை தேவ் அறிந்தாலும், அவ‍ளை அந்த நொடி காயப்படுத்த வேண்டும் என்றே, “யமுனா… யமுனா…” என்று கம்பீரமாகக் கத்தியவன், தன் இரும்பு கைகளை வைத்து கதவைத் தட்டினான். படபடத்து எழுந்த யமுனா, தேவ்வின் குரல் கேட்டு தன் முகத்தை சரி செய்து, கதவைத் திறக்கும்போதே, “மணி என்ன ஆச்சு? குழந்தைக்கு பால் கொடுக்குற டைம் போயே அரை மணி நேரம் ஆச்சு. அப்படி என்ன […]

அத்தியாயம் 45 Read More »

அத்தியாயம் 44

அலாரம் வைத்து காலையில் ஐந்திற்கு விழித்த யமுனா, மடமடவென காலைக்கடன்களை முடித்து விட்டு கையோடு தலைக்கு குளித்தாள். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன், பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த சத்தத்தில் விழித்த தேவ், டவலை வைத்து மூடிக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.  ஆனால் யமுனாவோ பிசிக்கலி பிரெஸ்சன்ட் பட் மென்ட்டலி ஆப்ஸ்சன்ட் போன்று காட்சியளித்தாள். யமுனாவின் மனதில் குழப்பத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை. வாழ்க்கையே ஒரு முடிச்சுக்குள் இருக்கிறது அதை எப்படி அவிழ்க்க

அத்தியாயம் 44 Read More »

அத்தியாயம் 43

தேவ்வின் அறைக்குச் செல்ல நினைக்கும்போதே, கை கால்கள் உதறியது. ‘உனக்கு இருக்குனு சொன்னானே, என்ன பண்ண போறான்?’ என்று பதறியவளின் கால்கள், தேவ்வின் அறைக்கு வெளியே நின்றது.  எப்படி இருந்தாலும் உள்ளே சென்று தான் ஆக வேண்டும் என்பதால் பெருமூச்சுவிட்டு, “உள்ளே வரலாமா?” என்று கேட்டுச் சென்றாள். மானை வேட்டையாட காத்துக் கொண்டிருக்கும் வேங்கை போல், யமுனாவின் மீது அழுத்தமான பார்வை விட்டவன், “கிளம்பு” என்று கூறிவிட்டு தன் கார் கீயை எடுத்தான்.  “எ… எங்க கிளம்பணும்?”

அத்தியாயம் 43 Read More »

அத்தியாயம் 42

“ஆ… ரேஷ் என்ன ஆச்சு, நான் ஆபிஸில் இருக்கிறேன்” என்று யமுனா கூறும்போது,  “யம்மு, ஆராதனா அழுதுட்டே இருக்கா. பாட்டில் பால் குடிக்க மாட்டுறா, சோறு ஊட்டுனா சாப்பிடலை. பாவம் பிள்ளை பதினைந்து நிமிஷமா விடாமல் அழுறா” என்று கூறும்போதே யமுனாவின் கண்களில் கண்ணீர் கொட்டியது.  “யம்மு லைன்ல இருக்கியா? அம்மா ஃபோனில் சொன்னாங்க, நீ தாய்ப்பால் கொடுக்கும் நேரம் இதுன்னு. ஒரு அரை மணி நேரம் பெர்மிஷன் போட்டு வந்து பால் குடுத்துட்டு போடீ” என்றாள்

அத்தியாயம் 42 Read More »

அத்தியாயம் 41

“என்ன ஷிரீஜா மேடம், உங்களுடைய அக்கவுண்ட்டிற்கு வாய் இல்லையா? நீங்களே பேசிக்கொண்டு இருக்கீங்க. அவங்களை வேலையில் வைக்கணுமா வேண்டாமா?” என்று நக்கல் தொனியில் தேவ் பேசிய விதம், ஷிரீஜாவிற்கே வருத்தத்தைக் கொடுத்தது. “சாரி சார், அது வந்து கைக்குழந்தை வெச்சிட்டு இருக்கா, கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க” என்று ஷிரீஜா கூறியபோது அதிர்ந்த தேவ், அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “கணவன் வெளிநாடுன்னு சொல்றீங்க? அப்போது எதுக்கு மேடம் மிஸஸ் யமுனா கைக்குழந்தையுடன் கையேந்திட்டு நிற்க வேண்டும்?” என்று

அத்தியாயம் 41 Read More »

அத்தியாயம் 40

“பிரனிதா, இதை தேவ் உன்னிடம் தரச் சொன்னான்” என்று செக்கைக் கொடுத்தவர், “ஆதிரா இனி உன்னோடு இருக்கட்டும்” என்று கூறும்போதே அவரின் கண்கள் கலங்கியது. வேறு வழி இல்லை என்று தெரிந்த பின்னர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தையை அவள் கையில் வாங்கியவர், முத்தமிட்டு திரும்பி பிரனிதாவிடம் கொடுத்தார்.  ‘தங்களின் கைக்குள்ளேயே வளர்ந்த குழந்தை, இப்போது தங்களைவிட்டு போகிறது என்றால் மனது எவ்வளவு கனமாக இருக்கும்? இன்னும் இந்த விஷயம் பிரியாவிற்கும் குணாவிற்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தால்,

அத்தியாயம் 40 Read More »

அத்தியாயம் 39

 யமுனா சென்றபின் தேவ், ‘போய்டுடீ என்னை விட்டு… என் கூட காதலில் சேராமல் உடம்பிற்காகச் சேர்ந்தேன் என்று சொல்லிட்டு, என்னை கொன்னுட்ட!’ என்று வெறுமையாக நினைத்தான். ஆனால் யமுனா தேவ்வின் மேல் கொண்ட காதலால் தான், தேவ்வோடு சங்கமித்தாள் என்பதை யமுனா சொல்லாமல் தேவ் எப்படி அறிவான்.  சீதாலட்சுமி வெளியே வந்து யமுனாவைத் தேடிக்கொண்டிருந்தபோது, “அம்மா, யமுனா போய்ட்டா… இனி இங்கு வர மாட்டாள். அவளைப் பற்றி இனி என்னிடம் பேசாதீர்கள்” என்று கூறிவிட்டு வெளியே சென்ற

அத்தியாயம் 39 Read More »

அத்தியாயம் 38

தன் அம்மாவை அழைத்து, ஆதிராவை வெளியே எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டு, “வேற என்ன சொல்ல சொல்ற? எனக்கு நீ பிறக்கவில்லை என்று என்னால் கூற முடியாது. அதற்காக உன்னையும் விட்டுக் கொடுக்க முடியாது. பிரனிதா ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறாள், நான் அவளுக்கு பணத்தைக் கூட கொடுக்கத் தயார்.  ஆனால், அவள் வாங்கத் தயாரில்லை. அவளுக்கு குழந்தை வேண்டுமென தீர்மானமாக இருக்கின்றாள். இந்த விஷயத்தில் நான் ஒரு அந்நியன் ஆகிட்டேன் யமுனா. ஆதிராவின் அப்பா நான் இல்லாமல்,

அத்தியாயம் 38 Read More »

அத்தியாயம் 37

அப்படியே நீண்ட நேரம் ஷவரில் அமர்ந்து அழுதவள், “யமுனா… கதவைத் திற, எவ்வளவு நேரமாய் குளிச்சிட்டு இருக்க?” என்ற தேவ்வின் சத்தத்தைக் கேட்டு பதறியவள், மடமடவென ஷவரை ஆஃப் செய்துவிட்டு கண்களைத் துடைத்தாள். அங்கு இருந்த டவலை தலையில் கட்டி, உடையை அணிந்து கதவின் மேல் கையை வைத்தவள், எப்படி தேவ்வை எதிர்கொள்ள போகிறோம் என்று நினைத்து ஒரு பெருமூச்சுவிட்டு கதவைத் திறந்தாள்.  “என்ன பண்ணிட்டு இருந்த யமுனா இவ்வளவு நேரம்? ஏன் உன் முகம் ஒருமாதிரி

அத்தியாயம் 37 Read More »

அத்தியாயம் 36

“ஏங்க?” என்று அமைதியாக அழைத்தவளை ஒரு பார்வை பார்த்த தேவ், “காலையில் ஒரு ஆயிரம் தேவ் போட்டு பேசுன, இப்போது என்ன செலக்டிவ் அம்னீஷியாவா?” என்று நக்கலாகக் கேட்டான். “அம் சாரி… நான் அப்போது இருந்த நிலைமையில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன். உங்களை வேற தவறா பேசிட்டேன். நீங்கள் சொன்ன அப்புறம்தான் எனக்கு புரிஞ்சிது” என்று தயங்கினாள். ‘நீ என்னை எப்போது தான் சரியா புரிஞ்சிருக்க யமுனா?’ என்று மனதில் நினைத்தவன், யமுனாவிடம் எதுவும் கூறாமல் மறுபடியும்

அத்தியாயம் 36 Read More »

error: Content copy warning!!