அத்தியாயம் 3
பரிமளா வேகமாக உடைகளை அணிந்து வெளியே வர, “ஏய்! என்னோட பெத்ரூம் பாத்ரூமை கழவுற பொம்பளைங்க தகுதி கூட உனக்கு இல்ல! எவ்வளவு திமிர் இருந்தா இங்க குளிச்சிட்டு வந்திருப்ப” என கர்ஜித்தபடி எழுந்தவனோ பரிமளாவை நோக்கி வேக எட்டுக்கள் வைத்து வர, பரிமளாவிற்கு பயத்தில் இதயம் வேகமாக அடித்தது…
தன் அறையில் பிரத்யேகமாக இருக்கும் உயர்தர குப்பைத் தொட்டியை எடுத்தவன் பட்டென்று பரிமளாவின் மீது கொட்டி விட்டான்… இதைச் சற்றும் எதிர்பாராதவள் அதிர்ச்சியில் உறைநிலைக்கே சென்றுவிட்டாள்…
“இந்த மாதிரி அதிங்கபிரசங்கி வேலை பண்ணா உனக்கு இதை விட மோசமா தண்டனை கிடைக்கும்… போ! உனக்கு கொடுத்த ரூமுக்கு போய் குளிச்சிட்டு வா… இன்னும் பத்தே நிமிஷம் தான் உனக்கு டைம்… அதுக்கு அப்புறம் ஒரு செகண்ட் அதிகமானாலும் உன்னை வைச்சு செஞ்சிடுவேன்” என மிரட்டியவன், “யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ” என சொல்ல, வேக ஓட்டம் பிடித்து தன் அறை நோக்கி சென்றாள்…
அவளின் ஓட்டத்தைப் பார்த்து மனதில் வக்கிரமாக சிரித்தவன்,”இந்த ஓட்டம் பத்தலயே” என்றபடி தாடையைத் தடவினான்…
அடுத்த பத்து நிமிடத்தில் சர்வஜித் முன்னே மூச்சு வாங்க வந்து நின்றாள் பரிமளா…
காக்கா குளியலைத் தான் அவளால் போட முடிந்தது… அதிலும் சர்வஜித்தின் பற்தடங்கள் பட்ட இடங்கள் காரப் பொடி தூவியது போல் காந்த, பேருக்கு தான் குளித்து வந்திருந்தாள்…
அவளை மேலிருந்து கீழ் வரை முகம் சுளித்து பார்த்தவன், “குளிச்சியா இல்லயா” என புருவத்தை உயர்த்தி கேட்டான்…
“குளிச்சேன் சார்” என அவள் கம்மிய குரலில் சொல்ல,
“இல்லையே உன்னைப் பார்த்தால் குளிச்ச போல தோணலயே” என தன் கழுத்தை நீவியவன், “கம் வித் மீ” என அவனின் பாத்ரூமிற்குள் செல்ல,
‘போச்சு… ஏதோ பிளான் பண்ணிட்டான்’ என பெண்ணவளுக்கு தான் மனதில் திக் திக்கென்று இருந்தது…
ஆனாலும் அவனின் பின்னே வேறு வழியின்றி சென்றாள்…
“எனக்கு எப்போவுமே ஃபிரெஷ்ஷா இருக்கணும்… இந்த மாதிரி அழுக்கு படிஞ்சு இருந்தா சுத்தமா பிடிக்காது” என்று அவன் அழுத்தமாக சொல்ல,
‘நீ கொடுக்குற பத்து நிமிஷத்துக்கு அழுக்கு படிஞ்சு இல்லாம ஐஸ்வர்யா ராயாவா இருக்க முடியும்’ என மனதில் அவனை வறுத்தெறுத்தாள் பரிமளா.
நிஜத்தில், வெளியில் தான் அவனை எதிர்க்க முடியவில்லை… மனதிற்குள்ளாவது அவனை நன்றாக திட்டலாம் என முடிவெடுத்து இருந்தாள் பரிமளா.
இங்கு அவள் மைன்ட்வாய்ஸ்ஸில் அவனை வறுத்தெடுக்க, அவனோ குளிர குளிரத் தண்ணீர் பக்கெட்டை தூக்கி அவளின் தலையில் வேகமாக கொட்டினான்…
இதை சற்றும் எதிர்ப்பாராத பரிமளா துடிதுடித்து போனாள்…
ஏனெனில் பரிமளாவிற்கு குளிர்ந்த நீர் ஒத்துக்கொள்ளாது…
அவளின் வீட்டிலேயே வெந்நீர் கலந்து தான் குளிப்பாள்…
அவள் கொண்டுவந்த சுடிதார் தான் அணிந்திருந்தாள்… இப்போது தண்ணீர் சொட்ட சொட்ட அவள் குளிரில் துடிக்க, அவளின் மீது துண்டைப் போட்டவன்,
“இப்போ தான் குளிச்ச மாதிரி இருக்க… இனி சரியா குளிச்சிருக்கணும்… இல்லன்னா நாளைக்கு எல்லாம் பத்து பக்கெட் தண்ணிர் ஊத்துவேன்” என திமிராக சொன்னவனோ,
“இந்த டிரெஸ்ஸை உன் கையால தோய்ச்சு இங்க இருக்குற துணி ஸ்டான்ட்ல காயப் போட்டுட்டு வா” என்றான் பாருங்க… ஆடிப்போய் விட்டாள்!
உடல் நடுங்க, “அப்போ நான் என்ன டிரெஸ்ஸை போடுவேன்” என திணறி அவளையும் மீறி வாய்விட்டு கேட்டே விட்டாள்…
அதில் அவளை அனலென முறைத்தவன், “நான் சொல்றதை மட்டும் தான் நீ செய்யணும்… என்னை எந்த கேள்வியும் கேட்க கூடாது… புரிஞ்சுதா” என அவன் அதட்ட, பயத்தில் அடங்கித் தான் போனாள் பாவை.
பாத்ரூம் கதவை சாற்றியவளின் உடலோ குளிரில் வேகமாக நடுங்க மனதோ கொளுந்து விட்டு எரிய, அவளின் கண்களில் சூடாக தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது…
வேகமாக தன் உடைகளை களைந்தவள், அங்கிருந்த துணி சோப்பை எடுத்து கடமைக்கே என்று தோய்த்தாள்… அவளின் உடலிலும் மனதிலும் தெம்பில்லை…
“இதை அவன் ரூம்ல இருக்குற ஸ்டான்ட்ல நான் காயப் போட்டா இப்போ என்ன டிரெஸ் போடுவேனாம்… ஏன் இப்படி போட்டு படுத்துறான்” என வாய்க்குள் முணுமுணுத்தபடியே அவள் அழ,
பெட்ரூம் கட்டிலில் சாய்வாக அமர்ந்திருந்த சர்வஜித்தின் மனதிலோ, “இன்னும் உன்னை நிறைய படுத்தணும் டி… அப்போ தான் கொளுந்துவிட்டு எரியுற என் மனசு கொஞ்சமாவது நிம்மதி ஆக்க முடியும்” என்று சொல்லியபடி சத்தமாக சிரித்தான்…
ரொம்ப நேரமாக உடையே இல்லாமல் எப்படி வெளியில் செல்வது என யோசித்து திணறியவளின் கண்களில் தான் உபயோகித்த துண்டு பட, அதை எடுத்து தன்னை சுற்றிக் கொண்டாள் பரிமளா…
கையில் துணிகளுடன் கதவைத் திறந்தவளுக்கு சர்வஜித் அங்கு தான் இருப்பான் என தெரியும்…
இருந்தாலும் வந்து தானே ஆக வேண்டும்… இல்லையெனில் அதற்கும் தனக்கு தானே தண்டனை கிடைக்கும்!
கட்டிலில் காலை நீட்டி அமர்ந்திருந்த ஆறடி ஆண்மகனை கவனத்தில் பதிக்காமல் அங்கிருந்த துணி ஸ்டாண்ட்டில் தன்னுடைய சுடிதாரை விரித்து போட்டாள்…
யாரோ தன் முதுகை ரொம்ப நேரம் வெறிப்பது போல் தோன்ற, அவளையும் மீறி திரும்பி பார்த்தாள் பரிமளா…
சர்வஜித் தான் அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டு இருந்தான்…
அவளின் முட்டி மேல் வரை தான் அந்த துண்டு மறைத்து இருந்தது… அவளின் வாழைத்தண்டு போன்ற மிருதுவான தொடைகள் அவனின் கண்களுக்கு விருந்தளிக்க, அவளின் பின்புற அழகைக் கண்டு அவனுக்கு உணர்வுகள் ஏக ஏற்கனவே எக்குத் தப்பாக ஏறியிருக்க, இப்போது அவள் திரும்பிய நொடி,
அவளின் ஏறி இறங்கிய அழகான அங்க வனப்பு அவனுக்கு காம போதையை ஏற்ற, அதன் பின்னர் அவனால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை… அவனின் உணர்வுகள் தாராளமாக எழுந்துக் கொண்டன…
பரிமளாவோ திரும்பி பார்த்த நொடி சர்வஜித்தின் விழுங்கும் பார்வையை கண்டு வேகமாக திரும்பியிருந்தாள்…
துணியை காயப்போட்டாயிற்று… இனி அவளுக்கு இங்கு நிற்க வேலையில்லை… ஆனால் அவன் புறம் திரும்பவும் பயமாக இருந்தது…
அதுவும் இல்லாமல் இந்த உடையோடு அவள் எப்படி வெளியில் செல்வாள் என ஆயிரம் கேள்விகள் அவளின் மனதிற்குள் எழும்பிக் கொண்டிருக்க, அவளை பின்னால் இருந்து இறுக்கமாக அணைத்திருந்தான் சர்வஜித்… முரட்டுத்தனமாக மட்டுமே!
அதில் திடுக்கிட்டவள், “நான் இப்போ தான் சார் குளிச்சேன்” என கண்ணீர் மல்க, அவனிடம் விடுதலை பெற கெஞ்சினாள்…
“ஐ டோன்ட் கேர்” என அதிகாரத் தொனி கலந்த தாபத்துடன் சொன்னவன், அவளின் வெற்று முதுகில் முத்தமிட, அவனின் மீசை மற்றும் தாடி அவளை வன்மையாக தீண்டியது…
தன் உணர்வுகளை மதிக்க மாட்டான் எனத் தெரிந்தும் தான் கேட்டது பயன் இல்லாமல் போனதை நினைத்து மனதில் நொந்துக் கொண்டவளுக்கு கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது…
அவளின் கண்ணீரை எல்லாம் கண்டுகொள்பவனா சர்வஜித்!
அவளை தன் புறம் திருப்பியவன் அவளின் கண்ணீரை கண்டு, “நேத்து நைட் என் கூட செமயா கம்பெனி கொடுத்துட்டு இப்போ சும்மா சீன் கிரியேட் பண்ற பாத்தியா… பொய்க்காரி, பொய்க்காரி” என்று எளக்காரமாக நக்கல் அடித்தவன், அவளின் இடுப்பை சுற்றி வளைத்து தன்னுடன் நெருக்க, அவளின் மென்மைகள் பஞ்சுப் பொதியைப் போல மோதியது…
அதற்கு மேல் அவனால் ஒரு நொடி கூட பொறுக்க முடியவில்லை… அவளின் முகமெங்கும் வன்மையாக முத்தமிட்டவன், அவளின் கழுத்தின் கீழே ஊர்வலம் புரிய, தனக்கு இடைஞ்சலாக இருந்த துண்டின் நுனியை அவனின் பற்கள் வைத்து எடுத்தவன் அதை கீழே எடுத்து போட்டு அவளை அள்ளிக் கொண்டு கட்டிலில் போட்டவனின் உடைகளும் அடுத்து தரையில் தான் கிடந்தன…
அடுத்த ஒரு மணி நேரம் அவளை வெறியாய் ஆட்கொண்டவன் கசங்கி கிடந்தவளிடம், “ஐ நீட் யூ.. அம் நாட் ஸாட்டிஸ்ஃபைட்” என மீண்டும் ஆக்ரோஷமாக படர்ந்தான்…
மீண்டும் வன்மையாக அவளுக்குள் செலுத்தி முடித்தவன், “பத்து நிமிஷத்துல என் பாத்ரூம்ல குளிச்சிட்டு வா…” என எழுந்தவன் தன் அலமாரியைத் திறந்தான்…
‘எவ்வளவு தடவை டா என்னை குளிக்க வைச்சு தண்டனை கொடுக்குற.. என்னால முடியலயே… அம்மா! கடவுளே! உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது..’ என மனதில் குமுறியவளுக்கு வேறு என்ன தான் வழி.. அவன் சொல்வதை செய்யாமல் மறுத்துவிட்டால் அதனின் எதிர்விணை அபாயமாக இருக்குமே…
அலமாரியில் இருந்து ஒரு கவரை எடுத்தவன், கட்டிலில் கசங்கிய காகிதம் போல் சுருண்டு படுத்திருந்தவளின் மேல் தூக்கிப் போட்டான்…
“உன் பத்து நிமிஷம் தொடங்கியாச்சு… ஒரு செகண்ட் லேட்டானா உனக்கு பனிஷ்மென்ட்” என அதட்ட, முடியாமல் எழுந்தவள் பாத்ரூம் நோக்கி மெதுவாக சென்றாள்… அவளால் விரைந்து கூட செல்ல முடியவில்லை…
எப்படியோ மறுபடியும் அதே காக்கா குளியலை போட்டு தான் வந்தாள்… அதிலும் சர்வஜித் கொடுத்த உடையை அணிந்தவளுக்கு தூக்கி வாரி போட்டது… அது ஒரு கிழிஞ்ச சேலை…
ஆனாலும் ஆடையே இல்லாமல் இருப்பதற்கு இந்த கிழிஞ்ச சேலையே அவளுக்கு மேல் என்பது போல போதுமானதாக தான் இருந்தது…
அவளை மேலிருந்து கீழ் கண்டவனுக்கு தெரியும் அவள் சரியாக குளித்து இருக்கவில்லை என்று…
ஆனாலும் அவனுக்கு பசிக்கத் தொடங்கியிருந்தது… அவள் தானே சமைத்தாக வேண்டும்…
அதனால் குளியல் விஷயத்தை விடுவித்தவன், “இன்னும் ஒரு மணி நேரத்துல பொங்கல், சட்னி, சாம்பார் எல்லாம் பண்ணிடு… ஆன் டைம் வந்திருக்கணும்” என்றான் கட்டளையாக…
“கி… கிச்சன்” என தடுமாறியவளுக்கு பேசக் கூட திராணி இல்லை…
“கீழே ஹால்ல டைனிங் பக்கம்.. திங்க்ஸ் எல்லாமே கிச்சன்லயே இருக்கும்” என முடித்தவன், தன் அறையில் குளித்துவிட்டு தன் அலுவல் அறைக்கு விரைந்தான்…
‘எனக்கு சமைக்கவே தெரியாதே… நான் எப்படி பொங்கல் செய்வேன்’ என மனதில் திணறியவள், நேற்று இருந்த பெண்மணியிடம் உதவி கேட்கலாம் என நினைத்து கீழே சோர்ந்த நடையுடன் மெதுவாக நடக்க, அந்தப் பெரிய பங்களாவோ வெறிச்சோடி காணப்பட்டது…
“நேத்து இருந்தவங்க எங்க!” என வாய்க்குள் முணுமுணுத்தபடியே அவள் தேடியபடியே சில நிமிடங்கள் கடந்திருக்க,
தன் அலுவல் அறை வாசலில் கைக்கட்டியபடி காலை கிராஸாக வைத்து நின்றிருந்த சர்வஜித், அவளின் செய்கையில் விஷயத்தை புரிந்து,
“உன்னையும் என்னையும் தாண்டி இந்த வீட்டுல இப்போ யாருமே இல்ல” என்றான் அழுத்தமாக.
“நீ மட்டும் தான் எல்லா வேலையும் பார்க்கணும்… அப்போ தானே என் பணத்தை எல்லாம் கழிக்க முடியும்” என்றான் நக்கலாக…
‘ராட்சசன் போல பண்றான்… இப்போ நான் என்ன பண்ணுவேன்’ என மனதில் திணறியவள், தன் ஃபோனை எடுத்து ரெசிபி பார்க்கத் தொடங்கினாள்…
அவளின் தாய் எப்போதுமே கையில் கொண்டு வந்து சாப்பாடை கொடுப்பார்…
முதல் முறையாக சமையல் கட்டிற்கு சமைக்க செல்கிறாள்…
யூடியுப்பில் வீடியோவை பார்த்தவுடன் அவளால் உடனே புரிந்துக் கொள்ள முடியவில்லை…
அதனால் மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தாள்.. இதிலே பத்து நிமிடங்கள் கடந்திருக்க…
‘அடியேய்! இன்னும் நாப்பது நிமிஷம் தான் இருக்கு… டைம்குள்ள செஞ்சு முடி இல்லன்னா அவன் தண்டனை கொடுக்க வந்திடுவான்…’ என பதறியவள், சமைக்க ஆரம்பித்தாள்…
சட்னி மற்றும் சாம்பாரின் வீடியோவையும் கூட பார்த்தவள், ‘ஹோட்டல் நடத்துவது போல பொங்கல், சட்னி, சாம்பார்ன்னு கேட்குறான்… விட்டா வடையும் கேட்பான் போல… இவன் சாப்பாடுல பேதி மருந்து கலந்திட்டா என்ன’ என ஆதங்கத்தில் நினைத்தவள்,
‘இப்படி நான் நினைச்சேன்னு அவனுக்கு தெரிஞ்சாலே என்னை பத்து நாள் பேதியாக்கி பாதியாக்கிடுவான்’ என மனதில் பயந்தவள், வேகமாக வீடியோவை பார்த்தபடி சமையல் வேலையில் மும்முரமாக இறங்கினாள்.
