February 2026

அத்தியாயம் 25

சுபா திங்க்ஸை பேக் செய்துக் கொண்டிருந்த போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ‘யாராக இருக்கும்? ஒருவேளை கிளீனிங்க்கு யாராவது வந்திருப்பார்களா?’ என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சி.   அவள் யாருக்கு பயந்து நான்கு வருடம் வீட்டை விட்டு தன் குடும்பத்தை விட்டு தன் ஊரை விட்டு விலகியிருந்தாளோ அவனே அவள் கண் முன் நிற்கிறான். ஏனெனில் அவள் கண்டது அவளுடைய கணவன் அஸ்வின். அஸ்வினைக் கண்ட மறுகணம் சுபாவிற்கு நடுக்கம் வந்தது.   […]

அத்தியாயம் 25 Read More »

அத்தியாயம் 24

“நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ணா என்கிட்ட சொல்லு பிசினஸ் டீலிங் பேசலாம்” என்று தன் இடத்தை விட்டு எழுந்த அஸ்வின் வேகமாக வெளியே சென்றான். அஸ்வின் வெளியே சென்றதும் அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள் ரேவதி. “சார் ப்ளிஸ் நில்லுங்க எனக்கு அவன் கூட வாழ எல்லாம் விருப்பம் இல்லை… “   “சார் நான் இங்க கோடம்பாக்கத்தில விக்ரம் ரெசிடென்சி ஹோட்டல்ல என் தோழி கிட்ட பையன விட்டுட்டு வந்திருக்கேன். பணத்தை வாங்கிட்டு அப்படியே

அத்தியாயம் 24 Read More »

அத்தியாயம் 23

அப்போது தான் சுபாவும் ரேவதியும் பார்த்துக்கொண்டனர். சுபாவை பெங்களுரிலேயே இருக்க சொன்ன ரேவதி தன் கதையை கூறி முடித்தாள். ஆனால் சுபா தன் கதையை விளக்கி சொல்லவில்லை.    ஒருவன் தன்னை கெடுத்து மிரட்டி திருமணம் செய்து தன்னை அவனுக்கு பணியவைத்து வேறு ஒரு பெண்ணோட தொடர்பில் இருக்கிறான். இவ்வளவே அவள் அஸ்வினைப் பற்றிக் கூறியது அஸ்வினுடைய பேரும் ரேவதிக்குத் தெரியாது.    ரேவதி விக்கியின் புகைப்படத்தை சுபாவிடம் காட்டியிருக்கிறாள் ஆனால் சுபா அவனை பார்க்கும் போதே

அத்தியாயம் 23 Read More »

அத்தியாயம் 22

அடுத்த நாள் காலை ரேவதிக்கு சந்தோஷமாக விடிந்தது. அவள் எழுந்தவுடன் தன் ஆடைகளை சரி செய்து விட்டு விக்னேஷைத் தேடினாள். விக்னேஷ் தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி கடுப்பில் இருந்தான்.    பெண்களிடம் சுற்றும் விக்னேஷ் பொதுவாக யாரிடமும் எல்லை மீறியதில்லை. ஆனால் ரேவதி விஷயத்தில் எப்படி அவசரப்பட்டோம் என்று  நினைத்தவன் முன் ரேவதி வெட்க முகத்துடன் வந்து நின்றாள்.   ரேவதியிடம் முகம் கொடுத்து பேசாமல்,  “கிளம்பலாமா?” என்று கேட்டு அவளுடைய பதிலை எதிர்ப்பார்க்கலாம்

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

ரேவதியை பெங்களூரில் விட்டுவிட்டு சுபா விடைபெற்று செல்ல முற்பட்டாள்.  ஆனால் ரேவதிக்கோ அவளை அனுப்ப மனம் வரவில்லை தன்னோடு இருக்குமாறு வற்புறுத்தி அவளை தன்னுடன் இருக்க வைத்தாள்.   தன்னுடைய தாய் சிறிய வயதில் இருக்கும் பொழுதே தொற்றுநோய் வந்து இறந்த பின் தனது தந்தை ரமேஷ் மட்டுமே ரேவதிக்கு உலகம் பெங்களூரில் வசிக்கும் தமிழர்களான இவள் குடும்பம் சொந்தக்காரர்களின் ஒட்டுதல் இல்லாமல் தான் இருந்தனர்.    பார்க்க துருதுருவென அழகாக வலம் வந்தாள். கல்லூரி முடியும்

அத்தியாயம் 21 Read More »

அத்தியாயம் 20

“இங்க பாருங்க மிஸஸ் ரேவதி நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க ஆகாஷ்க்கு இப்போ வயசு அஞ்சு ஆகுது ஹார்ட்ல ஒரு ஹோல் இருக்கு அதை நம்ம ஆப்பரேட் பண்ணி சரி பண்ணிடலாம் இந்த வயசுலயே செஞ்சிட்டா அவனுக்கு நல்லது” என்றார் டாக்டர் பிரஸீத் கிருஷ்ணா.   அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ரேவதிக்கு ஒரு கால் வந்தது. “ஆமா அந்த ஹாஸ்பிடல் தான் நான் டாக்டர் ரும்ல இருக்கேன் வா” என்று கால்லை கட் செய்து

அத்தியாயம் 20 Read More »

அத்தியாயம் 19

இன்றோடு சுபா அஸ்வினுடைய வீட்டை விட்டுச் சென்று நான்கு வருடங்கள் ஆகிறது. அன்று மாலை மாளவிகாவின் மகள் மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர் ஒரு ஹாலில்.   “அம்மா அண்ணன் வருவாரா இல்லையாம்மா குட்டிக்கு இன்னிக்கு பிறந்தநாள்னு தெரியும்ல” என்றாள் அன்னையிடம்.   “அவன் ஆபிஸ்ல இருந்து வரல இன்னும்… நமக்காக இல்லைனாலும் குட்டிக்காக வருவான்” என்றார் சசிகலா.   அரவிந்த் மற்றும் தீபிகாவிற்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு சர்வேஷ் என்கிற ஒரு

அத்தியாயம் 19 Read More »

அத்தியாயம் 18

சுபாவின் பக்கத்தில் நடந்து வந்த அஸ்வின் அவளை நெருங்கி அவளுடைய முகத்தை தன் இரு கைகளில் ஏந்தினான். முதலில் அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தவன் அவளின் விசும்பல் சத்தம் கேட்டு அவளை விட்டுவிட்டான்.   ”என்ன ஆச்சு?” என்றவனின் குரலில் எரிச்சல் இருந்தது.   “எனக்கு பயமா இருக்கு ப்ளிஸ் என்னை விட்டுருங்க” என்றாள் கெஞ்சுதலாக.   ”உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டு இருக்க சுபா இன்னிக்கு நமக்கு முதலிரவு நீ ஒண்ணும் சின்ன குழந்தை

அத்தியாயம் 18 Read More »

அத்தியாயம் 17

இதைக் கேட்ட சுபாவிற்கு கண்களில் கண்ணீர் மூண்டது.   ”நான் சொன்னேன்றதுக்காக தான் அஸ்வின் அவர் கேபின் பக்கத்துல இருக்கிற அவரோட பெர்ஸ்னல் ரூம்ல என்னை கூட்டிட்டு போய் எனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டாரு. நாங்க இவ்வளவு க்ளோஸா இருக்கோம் இத பார்த்தும் நீ அவர் வாழ்க்கைய விட்டு போகலைனா உனக்கு மானமே இல்லை போல” என்று பொறிந்து விட்டு அஸ்வினின் பக்கத்தில் நின்றுக் கொண்டாள்.    தீபிகா நேற்றே அரவிந்த்திற்கு அறிவுரை கூறினாள். “நீங்க

அத்தியாயம் 17 Read More »

அத்தியாயம் 16

“ச்சி உன்னோட புத்திக்காக தான் நான் தீபிகாவ கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். அப்ப கூட உன் புத்தி மாறலனா நீ மனுஷனே இல்லை” என்றான் அரவிந்த்.   “ஹா ஹா எஸ் நான் மனுஷனே இல்ல நான் ஒரு மான்ஸ்டர் அன்ட் அரவிந்த் யூ நீட் டூ க்ரோ அப் எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது போன வாரம் வரைக்கும் சுபானு சுத்திட்டு இருந்த அவள நான் கெடுத்துட்டேன்னு தெரிஞ்சும் நீ அவளை கல்யாணம் பண்ண

அத்தியாயம் 16 Read More »

error: Content copy warning!!