Author name: Anu Jey

anujey

அத்தியாயம் 49

“பிரியா, உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா, உன் அண்ணனுக்கு வீட்டு முகவரி கொடுத்துருப்ப?” என்று கர்ஜித்த திவாகரை சொடக்கிட்டு அழைத்த தேவ், “உன் வீட்டை கண்டுபிடிக்குறது எனக்கு பெரிய விஷயம் இல்லை திவாகர். பிரியாவுக்கும் நான் வந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றான். “இப்போது எதற்கு இங்கே வந்த? முதல்ல வீட்டை விட்டு கிளம்பு” என்று திவாகர் கூறி முடிப்பதற்குள், ஆக்ரோஷமாக எழுந்த தேவ், தன் கூலர்ஸைக் கழற்றி, “அன்னிக்கு நான் இருந்த மனநிலை சரியில்லை. அதனால […]

அத்தியாயம் 49 Read More »

அத்தியாயம் 48

மூன்று தனி அறைகளைக் கொண்ட திவாகரின் வீட்டில், யமுனா மற்றும் ஆராதனா ஒரு அறையிலும், சேகர் மற்றும் விஜயலட்சுமி இன்னொரு அறையிலும், திவாகர் மற்றும் பிரியா இன்னொரு அறையிலும் இருந்தனர். தேவைக்கு மட்டுமே பிரியாவிடம் பேசிய திவாகரை, இரவு எப்படியாவது, திவாகரிடம் தஞ்சம் புகுந்தாவது அவன் மனநிலையை மாற்றலாம் என்று நினைத்தாள்.  அப்படித் தான் இரவு பத்து மணியளவில் அனைவரின் அறையிலும் விளக்கு அணைந்த பின், திவாகர் மட்டும் தன்னுடைய லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அத்தியாயம் 48 Read More »

அத்தியாயம் 47

“யமுனா, உங்களுக்குள்ள எல்லாம் சரியா இருக்குன்னு நினைத்து தான் நான் முன்னாடி அமைதியா இருந்தேன். இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது” என்று தேவ்விடம் திரும்பிய திவாகர், “நாங்கள் யமுனாவை அழைத்துக்கொண்டு போகிறோம்” என்று கூறினான்.  அதுவரை குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்தவனின் சிரித்த முகம் இறுக்கமானது. “உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போகத்தான் உனக்கு உரிமை இருக்கு. என் பொண்டாட்டியை கூட்டிட்டுப் போக நினைச்சாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று குழந்தையோடு எழுந்தான். “ஆராதனா பாப்பா, உன் அம்மா

அத்தியாயம் 47 Read More »

அத்தியாயம் 46

ஏற்கனவே கிறக்கத்தில் இருந்த யமுனா, தேவ்வின் மீது உள்ள காதலால், அவன் ஆட்டிப் படைக்கும் பாவையானாள். யமுனாவை கட்டிலில் போட்டு, அவளிடம் ஒன்றரை வருடங்கள் கழித்து தன் தேடலைத் தொடங்கியவன், இவ்வளவு மாதங்கள் யமுனா இல்லாமல் ஏங்கியதை மஞ்சத்தில் உணர்த்தினான். அவளின் உச்சி முதல் பாதம் வரை முத்தங்களைப் பதித்தவன், மென்மையாகத் தன் தேடலை முடித்துக் கொண்டான்.  தேவ்வின் வெற்று மார்பில் படுத்திருந்த யமுனாவிடம் மறுபடியும் நெருங்கிய தேவ், இம்முறை அவளிடம் முரட்டுத்தனமாக தேடலைத் தொடங்கினான். இதை

அத்தியாயம் 46 Read More »

அத்தியாயம் 45

யமுனாவும் ஒரு மனுஷி தான், அவள் புரோகிராமிங் செய்த மிஷின் இல்லை என்பதை தேவ் அறிந்தாலும், அவ‍ளை அந்த நொடி காயப்படுத்த வேண்டும் என்றே, “யமுனா… யமுனா…” என்று கம்பீரமாகக் கத்தியவன், தன் இரும்பு கைகளை வைத்து கதவைத் தட்டினான். படபடத்து எழுந்த யமுனா, தேவ்வின் குரல் கேட்டு தன் முகத்தை சரி செய்து, கதவைத் திறக்கும்போதே, “மணி என்ன ஆச்சு? குழந்தைக்கு பால் கொடுக்குற டைம் போயே அரை மணி நேரம் ஆச்சு. அப்படி என்ன

அத்தியாயம் 45 Read More »

அத்தியாயம் 44

அலாரம் வைத்து காலையில் ஐந்திற்கு விழித்த யமுனா, மடமடவென காலைக்கடன்களை முடித்து விட்டு கையோடு தலைக்கு குளித்தாள். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன், பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த சத்தத்தில் விழித்த தேவ், டவலை வைத்து மூடிக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.  ஆனால் யமுனாவோ பிசிக்கலி பிரெஸ்சன்ட் பட் மென்ட்டலி ஆப்ஸ்சன்ட் போன்று காட்சியளித்தாள். யமுனாவின் மனதில் குழப்பத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை. வாழ்க்கையே ஒரு முடிச்சுக்குள் இருக்கிறது அதை எப்படி அவிழ்க்க

அத்தியாயம் 44 Read More »

அத்தியாயம் 43

தேவ்வின் அறைக்குச் செல்ல நினைக்கும்போதே, கை கால்கள் உதறியது. ‘உனக்கு இருக்குனு சொன்னானே, என்ன பண்ண போறான்?’ என்று பதறியவளின் கால்கள், தேவ்வின் அறைக்கு வெளியே நின்றது.  எப்படி இருந்தாலும் உள்ளே சென்று தான் ஆக வேண்டும் என்பதால் பெருமூச்சுவிட்டு, “உள்ளே வரலாமா?” என்று கேட்டுச் சென்றாள். மானை வேட்டையாட காத்துக் கொண்டிருக்கும் வேங்கை போல், யமுனாவின் மீது அழுத்தமான பார்வை விட்டவன், “கிளம்பு” என்று கூறிவிட்டு தன் கார் கீயை எடுத்தான்.  “எ… எங்க கிளம்பணும்?”

அத்தியாயம் 43 Read More »

அத்தியாயம் 42

“ஆ… ரேஷ் என்ன ஆச்சு, நான் ஆபிஸில் இருக்கிறேன்” என்று யமுனா கூறும்போது,  “யம்மு, ஆராதனா அழுதுட்டே இருக்கா. பாட்டில் பால் குடிக்க மாட்டுறா, சோறு ஊட்டுனா சாப்பிடலை. பாவம் பிள்ளை பதினைந்து நிமிஷமா விடாமல் அழுறா” என்று கூறும்போதே யமுனாவின் கண்களில் கண்ணீர் கொட்டியது.  “யம்மு லைன்ல இருக்கியா? அம்மா ஃபோனில் சொன்னாங்க, நீ தாய்ப்பால் கொடுக்கும் நேரம் இதுன்னு. ஒரு அரை மணி நேரம் பெர்மிஷன் போட்டு வந்து பால் குடுத்துட்டு போடீ” என்றாள்

அத்தியாயம் 42 Read More »

அத்தியாயம் 41

“என்ன ஷிரீஜா மேடம், உங்களுடைய அக்கவுண்ட்டிற்கு வாய் இல்லையா? நீங்களே பேசிக்கொண்டு இருக்கீங்க. அவங்களை வேலையில் வைக்கணுமா வேண்டாமா?” என்று நக்கல் தொனியில் தேவ் பேசிய விதம், ஷிரீஜாவிற்கே வருத்தத்தைக் கொடுத்தது. “சாரி சார், அது வந்து கைக்குழந்தை வெச்சிட்டு இருக்கா, கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க” என்று ஷிரீஜா கூறியபோது அதிர்ந்த தேவ், அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “கணவன் வெளிநாடுன்னு சொல்றீங்க? அப்போது எதுக்கு மேடம் மிஸஸ் யமுனா கைக்குழந்தையுடன் கையேந்திட்டு நிற்க வேண்டும்?” என்று

அத்தியாயம் 41 Read More »

அத்தியாயம் 40

“பிரனிதா, இதை தேவ் உன்னிடம் தரச் சொன்னான்” என்று செக்கைக் கொடுத்தவர், “ஆதிரா இனி உன்னோடு இருக்கட்டும்” என்று கூறும்போதே அவரின் கண்கள் கலங்கியது. வேறு வழி இல்லை என்று தெரிந்த பின்னர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தையை அவள் கையில் வாங்கியவர், முத்தமிட்டு திரும்பி பிரனிதாவிடம் கொடுத்தார்.  ‘தங்களின் கைக்குள்ளேயே வளர்ந்த குழந்தை, இப்போது தங்களைவிட்டு போகிறது என்றால் மனது எவ்வளவு கனமாக இருக்கும்? இன்னும் இந்த விஷயம் பிரியாவிற்கும் குணாவிற்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தால்,

அத்தியாயம் 40 Read More »

error: Content copy warning!!