May 2026

பிரியாதிரு 28

பிரியாதிரு 28   அமிர்தாவிற்கு ஆத்மன் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருப்பதைக் கண்டு கண்களில் கண்ணீர் படர ஆரம்பித்தது…    “ஐ நீட் டூ கோ நானா” என தந்தையிடம் சொன்னவன் ஃபோன் பேசியபடியே வெளியே சென்றான்..   “ஆத்மா இரு..” என்றபடி அவனின் தோளை லேசாக உரசியபடி சிந்துஜாவும் செல்ல, அதைக் கண்ட அமிர்தாவிற்கோ அந்த கண்ணீரிற்கு நடுவிலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது…    அமிர்தாவின் பாட்டு இந்தியா முழுவதும் பட்டையைக் கிளப்பியது…    அனன்யா, சர்வா, […]

பிரியாதிரு 28 Read More »

அத்தியாயம் 12

“நான் உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன், நீ அப்படியே பொம்மை மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று அவள் கண் முன்னே சொடக்கிட்டான் பிரகாஷ். அப்போது தான் அதிர்ச்சியில் இருந்து சுயநினைவிற்கே வந்தாள் ராதை.   “நீங்க நினைக்குற மாதிரியான பொண்ணு நான் கிடையாது. உங்களை என்னோட அக்கா கோதை உயிருக்கு உயிராக விரும்புறா… அதுவும் இல்லாம வனிதா உங்களை தான் கணவரா நினைச்சுட்டு இருக்கா” என்று சொல்லும் போதே அவளின் கன்னத்தில் அறைய கையை ஓங்கிய பிரகாஷ்

அத்தியாயம் 12 Read More »

தீ 4

எப்படியோ ஒரு மணி நேரத்திற்குள் சமையலை அடித்து பிடித்து செய்து முடித்தாள்…    ஒரு மணி நேரமாக அவளுக்குள் எத்தனை பயம், படபடப்பு, பதற்றம் சூழ்ந்தது என அவளுக்கு மட்டுமே தெரியும்..    இன்னும் சொல்லப் போனால் பதற்றத்தில் அவளுக்கு இதயம் தடதடத்து, தலையெல்லாம் சுற்றியது…    ஆனாலும் அவனிடம் இன்று தண்டனை வாங்க அவளுக்கு இதற்கு மேல் உடலிலும் மனதிலும் தெம்பு இல்லை…    சாப்பாடு மேஜையில் அனைத்தையும் வேகமாக அடிக்கி வைத்தவள், நேரத்தை பார்த்து

தீ 4 Read More »

தீ 3

அத்தியாயம் 3   பரிமளா வேகமாக உடைகளை அணிந்து வெளியே வர, “ஏய்! என்னோட பெத்ரூம் பாத்ரூமை கழவுற பொம்பளைங்க தகுதி கூட உனக்கு இல்ல! எவ்வளவு திமிர் இருந்தா இங்க குளிச்சிட்டு வந்திருப்ப” என கர்ஜித்தபடி எழுந்தவனோ பரிமளாவை நோக்கி வேக எட்டுக்கள் வைத்து வர, பரிமளாவிற்கு பயத்தில் இதயம் வேகமாக அடித்தது…   தன் அறையில் பிரத்யேகமாக இருக்கும் உயர்தர குப்பைத் தொட்டியை எடுத்தவன் பட்டென்று பரிமளாவின் மீது கொட்டி விட்டான்… இதைச் சற்றும்

தீ 3 Read More »

அத்தியாயம் 11

தன்னை சமாதானப்படுத்திய பாட்டியிடம், “குட் நைட்” சொல்லிவிட்டு வந்து படுத்தாள் ராதை. ‘பாட்டி சொன்னது போல  கடவுள் பாத்துப்பாரு’ என்கிற நம்பிக்கையோடு உறங்க சென்றாள் ராதை.   அங்கு வனிதாவோ வீட்டிற்கு வந்ததுமே தேடியது பிரகாஷ் சிவமாறனை தான். “ஏய் வனிதா, என்ன ஆச்சு உனக்கு?” என புரியாமல் கேட்டார் வனிதாவின் தாய்.    “ஒன்னும் இல்லம்மா, அத்தை எங்க?” எனக் கேட்டவளின் குரலைக் கேட்டு வெளியில் வந்த விஜயா, “வா வனிதா, எப்படி இருக்க?” என

அத்தியாயம் 11 Read More »

தீ 2

அத்தியாயம் 2 அடுத்த பத்து நிமிடத்தில் பரிமளா இருந்த அறைக்கதவு தட்டப்பட, பயத்துடன் கதவைத் திறந்தாள் பரிமளா…  “ஐய்யா, உன்னை மேல வர சொன்னாரு தாயி… மாடி ஏறுனா வலது பக்கத்துல இருக்குற முதல் அறை” என சொல்லிவிட்டு கிளம்பினார் அந்த வீட்டு வேலையாள்.  மருட்சியுடன் தலையை ஆட்டிய பரிமளாவோ, சர்வஜித் காட்டிய பயத்திலேயே முகத்தை கழுவிவிட்டு அங்கிருந்த ஆடையான சேலையை எடுத்து அணிந்திருந்தாள்…  அது ஒரு விலை மலிவான சேலை..  அதை அவள் எடுத்து தன்

தீ 2 Read More »

அத்தியாயம் 10

இருவரும் அன்று மதியம் கோவைக்கு வந்தடைந்தார்கள். ராதையை அழைக்க, கோதை தன்னுடைய காரில் வந்திருந்தாள். வனிதாவை அழைக்க, பிரகாஷின் தம்பி விஜயேந்திரபூபதி வந்திருந்தான்.    ராதையைக் கண்ட கோதையோ அவளை இரண்டு வருடங்கள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் சந்தோஷத்துடன் கட்டி அணைத்தாள். ராதையுமே தன் அக்காவுடன் பாசப் பிணைப்பில் இணைந்து அகம் மகிழ்ந்தாள். அதன் பின்னர் வனிதாவிடம் பிரியாவிடை பெற்று தன் அக்காவுடன் சென்றாள்.    “ஹலோ டாக்டர் எப்படி இருக்கீங்க?” எனற்படி விஜய்யிடம் விளையாடினாள் வனிதா. 

அத்தியாயம் 10 Read More »

பிரியாதிரு 27

பிரியாதிரு 27   அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார்கள் ராஜேஷ் ரெட்டியின் குடும்பம்… அமிர்தாவோ கதறி கதறி அழ, கவிதாவும் அப்படி அழுதார்…    ராஜேஷ் ரெட்டி துவண்டு விட, சுவாதியின் கண்களில் குளம் கட்டியது.    அஜய் க்கும் பதற்றம் அதிகமாகியது…    “ஆத்மன் சார் MRR ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காரு” என ஒருவன் கால் செய்து சொல்லிவிட்டு உடனே கட் செய்துருக்க, அமிர்தாவோ ஸ்தம்பித்து உறைந்து விட்டாள்…    அந்நொடி அவள் அதிர்ச்சியில் மயங்கியும்

பிரியாதிரு 27 Read More »

தீ 1

“மொத்தம் இருபத்தி ஓரு லட்சம்…” என தன்னுடைய நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த சர்வஜித்தோ தன் பற்களை நரநரத்தபடி கர்ஜித்தான்…    “ச… சார்” என குரல் நடுங்க பரிமளா விசும்ப,    “நாளைக்குள்ள பணம் வட்டியோட வந்தாகணும்”  என்று அவளை பார்த்து கனல் தெறிக்க சொன்னான்.    “ச… சார் இப்போ ப.. பணம் கையில இல்ல” என சொல்லி முடிக்கும் போதே பெண்ணவளின் தொண்டை குழி வறண்டது…   “வாட்… பணம்

தீ 1 Read More »

அத்தியாயம் 9

“அத்தான் ரொம்ப சாரி, அவ கொஞ்சம் ரிசர்வ்டு டைப். அதனால இப்படி சொல்லிட்டு போயிட்டா, ஆனா ரொம்ப நல்ல பொண்ணு. என்னோட பெஸ்ட் பிரண்ட். நான் வினிதாகிட்ட பேசி உங்களுக்கு அவளோட நம்பர் வாங்கி கொடுக்குறேன்” என்றாள் வனிதா.    “இல்லை வனிதா, எனக்கு யாரோட நம்பரும் வேண்டாம்… சார்ட் ஒட்டிட்டாங்க, நீ டிரெயினல் ஏறி உட்காரு, நான் கிளம்பறேன்” என்றவனோ வேக நடையுடன் தன் காரை நோக்கி சென்று ஏறினான். அவனின் கோபத்தில் கார் வேகமாக

அத்தியாயம் 9 Read More »

error: Content copy warning!!