August 2026

துருவம் 6

“என்னதிது மாமா ஃபோன் அடிக்குது” என்றவள் எட்டிப் பார்க்க வரும் பொழுதே ஃபோனும் ரிங் கட்டாகி விட,    “என்ன பண்ற?” என்ற கணீர் குரலில் கேட்டபடி உள்ளே வந்தான் அஷ்வின்.    “உங்க ஃபோன் அடிச்சிடு மாமா.. அதான் யாருன்னு” என்றவள் இழுக்க,    “உன் வேலையைத் தவிர எல்லாம் சரியா பாரு” என்றபடி தன் ஃபோனை எடுத்து பார்த்தவன் புருவத்தை சுருக்க,    ‘ம்க்கும் என் வேலையே இவரை கரெக்ட் பண்றது தான் ஆனா […]

துருவம் 6 Read More »

துருவம் 5

ஆம், அனன்யா அஷ்வினை பல வருடங்களாக ஒரு தலையாக காதலிக்குறாள்.    அஷ்வின் மற்றும் அனன்யா இருவருக்குமே சொந்த ஊர் ஊட்டி தான்..    அனன்யாவின் தாத்தா வேதாச்சலத்திடம் அஷ்வினின் தந்தை மணி மேனேஜராக பணிபுரிந்தார்.    மணியின் வீடு அனன்யாவின் பங்களாவை ஒட்டியே இருக்க, அப்போது இருந்தே அஷ்வினை ஒருதலையாக காதலிக்குறாள்.    அஷ்வினின் மொபைல் எண்ணை அப்போதே திருட்டுத்தனமாக மணியின் செல்லில் அவருக்குத் தெரியாமல் எடுத்து, சில வருடங்கள் முன்னர் அவனை தான் காதலிப்பதாய்

துருவம் 5 Read More »

துருவம் 3

விஜய் வீட்டில் பூ வைத்து விட்டு சென்ற அடுத்த இரண்டாவது நாள் அஷ்வின் தன்னுடைய வீட்டிற்கு கால் செய்தான்.    அழைப்பை எடுத்த மணி பக்கத்தில் மனைவி இருப்பதால் ஸ்பீக்கரில் போட,    “அஷ்வின்.. டெல்லில வேலை எல்லாம் முடிஞ்சுதா ப்பா.. ராகினி சொல்லுச்சு” என்றவரிடம்,    “எஸ் ப்பா.. முடிஞ்சுது.. ராகினி எப்போ ஃபோன் பண்ணா” என யோசனையுடன் கேட்டான்.    “ராகினி ஃபோன் பண்ணல ப்பா.. நம்ம பவாம்மா தான் ராகினிக்கு கால் பண்ணிருக்கா”

துருவம் 3 Read More »

அத்தியாயம் 59

அடுத்த நாள் ராதை எழும் போதே அவளுக்கு மனது படபடப்பாக இருந்தது. நேற்று இரவு ரொம்ப நேரம் தூக்கம் வராமல் அழுது கொண்டு அமர்ந்திருந்தவள் சோஃபாவில் அப்படியே உட்கார்ந்த வண்ணம் உறங்கியிருக்கிறாள்.    அடுத்த நாள் ராதை விழிக்கும் போதே மணி பத்தை நெருங்கி இருந்தது. “அய்யோ கடவுளே எப்படி இவ்வளவு நேரம் தூங்கினேன்” என்று தன்னையே படபடப்போடு திட்டியவள் கீழே வேகமாகச் சென்று கிச்சனில் இருக்கும் லட்சுமியிடம், “அத்தை, அவருக்கு எத்தனை மணிக்கு பிளைட்” என்று

அத்தியாயம் 59 Read More »

அத்தியாயம் 58

அன்று இரவும் வம்சி கீழே உள்ள அறைக்குள்ளேயே உறங்கச் சென்றான். ராதைக்குத் தான் தூக்கம் என்பதே சிறிதளவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டாள். அவளுக்கு யோசித்து யோசித்து தலையே கனக்க ஆரம்பித்தது.    சிறிது நேரத்தில் வயிறு வலிக்க ஆரம்பித்த ராதைக்கு, அப்போது தான் மாதவிடாய் நாட்கள் நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்து தனது தலையில் அடித்த ராதை, “வம்சியோட வாரிசு உருவாகுற பாக்கியம் கூட இல்லாம போச்சே” என்று தனக்குள்ளே கூறியவள் அதிர்ச்சியில் தன் எண்ணப்போக்கை நினைத்து அவளுக்கே

அத்தியாயம் 58 Read More »

அத்தியாயம் 57

அறைக்குள் உடை மாற்ற வந்த வம்சியோ, “வம்சி, எல்லாத்தையும் விட உன்னுடைய கண்ணியம் தான் முக்கியம். இனி உன் பார்வை ராதையோட பக்கம் போகவே கூடாது. உனக்கு செல்ஃப் கண்ட்ரோலிங் கெபாசிடி நிறையவே இருக்கு! சோ அவளோட காதல் உன் மேல இல்லாமல் நீ அவளைப் பார்க்கவே கூடாது” என்று கண்ணாடியில் தனக்கே சொல்லிக்கொண்டவன், பின் தெளிவு வந்தவனாய் ரெஸ்ட்ரூம் சென்று குளித்துவிட்டு உடை அணிந்து கீழே வரும்போதே அனிதாவும் அபிஷேக்கும் அங்கு இருந்தனர்.   அந்நேரம்

அத்தியாயம் 57 Read More »

அத்தியாயம் 56

ஷிவானி கூறியதற்கு ராதையிடம் எந்த ஒரு உணர்வும் இல்லை என்ற பின், ஷிவானி வம்சியைப் பற்றிய பேச்சை விடுத்தாள். “ராதை இதான் கடை, வாங்க உள்ளே போலாம்” என்று அவளை ஒரு நவநாகரீக கடைக்குள் அழைத்துச் சென்று ராதைக்கு பிங்க் கலரில் ஒரு அழகிய லாங்க் கவுனைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாள். ராதைக்கும் அந்த கவுன் பிடித்திருந்ததால் அதையே எடுத்தாள்.   “உங்களுடைய செலக்க்ஷன் நல்லா இருக்கு ஷிவானி” என்று மெலிதாக சிரித்த ராதையிடம், “அப்பாடி ஒரு வழியா

அத்தியாயம் 56 Read More »

அத்தியாயம் 55

ராதைக்கு வம்சியின் செயலில் உள்ள அர்த்தம் புரியவில்லை. ஒருவேளை பதுங்கி இருந்து பாய்வானோ என்றே நினைத்தாள்.    அடுத்த நாள் காலை விடியும் போதே லட்சுமி கிட்சனில் வித விதமாக ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார். “அத்தை என்ன ஸ்பெஷல் நிறைய வெரைட்டீஸ் செய்றீங்க?” என்று ஆச்சரியத்தோடு கேட்ட மருமகளிடம், “இன்று வேதந்த்தோட இருபத்தி ஒன்பதாவது பிறந்தநாள் மா” என்றார் புன்னகை முகமாக.    இதற்கு தான் எப்படி விடை அளிக்கவேண்டும் என்று கூட ராதைக்குத் தெரியவில்லை. “சரி

அத்தியாயம் 55 Read More »

அத்தியாயம் 54

நடுராத்திரி இரண்டு மணிக்கு விழித்த வம்சி, பக்கத்தில் உடை இல்லாமல் கசங்கி அழுது வீங்கிய முகத்தோடு உறங்கிக் கொண்டுருந்த ராதையைக் கண்ட பின் அவனின் மனதே பாரமானது.    “நான் உன்னை இப்படி அடையணும்னு நினைக்கவே இல்ல டி… என்னோட உணர்வுல நீ விளையாடினதுக்கு உனக்கு ஏத்த தண்டனை தான் இது” என்றவனோ அவளின் உடையில்லாத தேகத்தின் மேல் போர்வையைப் போர்த்தி விட்டு எழுந்து, தன் உடைகளை அணிந்துவிட்டு பால்கனிக்குச் சென்றான்.   ராதைக்குத் தான் கொடுத்தது

அத்தியாயம் 54 Read More »

அத்தியாயம் 53

ராதைக்கு தன் மேல் காதல் இல்லை… அறைக்கு செல்வதற்கு முன் விவாகரத்து என்று பேசியவள், ஐந்தே நிமிடத்தில் எப்படி அவளின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அளவுக்கு முடிவு எடுத்தாள்? ராதைக்குத் தன் மேல் காதல் இல்லை என்று ஆணித்தரமாக நினைத்த வம்சிக்கு அவளின் இந்த முடிவு சுத்தமாகப் பிடிக்கவில்லை.    ‘எப்பேர்ப்பட்ட சூழ்நிலையா இருந்தாலும் என்னைப் பிடிக்காமல் அவ ஏன் மறுபடியும் என் வீட்டிற்குள்ள வரணும்? இது என்ன விளையாட்டா? காதலிக்காம அவ உள்ளே வருவா, நான் அவளை

அத்தியாயம் 53 Read More »

error: Content copy warning!!